இரட்டை வேட நடிப்பில் விருது வாங்கியவர் எடப்பாடி: கருணாஸ் காட்டம்

சிவகங்கை: சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார். அவர் சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் தனது வேட்புமனுவினை நேற்று தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணி இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் இரட்டை வேடத்தில் ஆஸ்கர் விருது வாங்கியவர். திமுக கூட்டணியை குறை கூறுவதற்கு முன், அவர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: