தேவதானப்பட்டி, ஏப். 2: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. சில்வார்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் இரவு அம்மன் கங்கைக்கு சென்று அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
பின்னர் மறுநாள் அதிகாலை ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். தேவதானப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருவிழா விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
