பேராவூரணி அருகே வீட்டுத்தோட்டத்தில் 8 அடி உயரத்திற்கு வளர்ந்த தண்டுக்கீரை

பேராவூரணி, ஏப்.2: பேராவூரணி அருகே வீட்டுத்தோட்டத்தில் சுமார் 8 அடி உயரம் வளர்ந்துள்ள தண்டுக்கீரையை விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை ஊராட்சி கள்ளங்காடு கிராமத்தில் பெரியநாயகி என்பவர் தனது வீட்டின் அருகில் சிறிய தோட்டம் அமைத்து அதில் வீட்டிற்கு தேவையான காய்கறி பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். இதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட தண்டு கீரை கிடு கிடுவென சுமார் 8 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.

தண்டுக்கீரை வகைகள் சாதாரணமாக 1 அடி அல்லது 2 அடி உயரம் வரை மட்டுமே வளரும் நிலையில் 8 அடிக்கு மேல் வளர்ந்து செல்வது விவசாயிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்து பெரியநாயகி கூறியதாவது;, 8 அடி உயரம் வளர்ந்துள்ள கீரைத்தண்டை கள்ளங்காடு, குருவிக்கரம்பை, காலகம், கொன்றைக்காடு, நாடாகாடு மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பார்த்து செல்வதோடு, வளர்ந்துள்ள தண்டு கீரையின் விதைகள் வேண்டும் என கேட்டு செல்வதாக தெரிவித்தார்.

 

 

Related Stories: