திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

திருவிடைமருதூர், ஏப்.2: திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் மற்றும் கதிராமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் வாகன சோதனை, வாக்குச்சாவடி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திருப்பனந்தாள் மற்றும் கதிராமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் அருண் குமார் ஐஏஎஸ் ஆய்வு செய்தார். அப்போது, மண்டல துணை வட்டாட்சியர் பந்தநல்லூர், திருப்பனந்தாள் சரக வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.

 

Related Stories: