மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் நேரில் ஆய்வு

மன்னார்குடி, ஏப்.2: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் டிவி அனுபமா நேற்று நேரில் பார்வையீட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 17 வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 167 மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள டிவி அனுபமா மன்னார்குடி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள 25 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி மையத்தில் தடையற்ற மின்சாரம், குடிநீர், சாய் தளம் ஆகியவை சரியான முறையில் உள்ளதா? என்றும் சரியான பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது முதியோர்கள் சிரமமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து செல்வதற்கு ஏதுவாக சாய்தளத் தின் இருபுறமும் கைப்பிடியும், மாற்றுத்திறனாளிகளை சுலபமாக வீல் சேரில் அழைத்து வருவதற்கு வசதியாக மேடு, பள்ளங்களை சமன் செய்யவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நக்கீரன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சிய ராஜேஷ் கண்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

Related Stories: