வத்தலக்குண்டு, ஏப். 2: வத்தலக்குண்டுவில் மனிதநேய மக்கள் கட்சி கூட்டம் நடந்தது தலைவர் இம்தியாஸ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் அலாவுதீன் நன்றி கூறினார்.
