திமுக சட்டத்துறை சார்பில் ‘வார் ரூம்’ திறப்பு விழா

காஞ்சிபுரம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சட்டத்துறை சார்பில் மாவட்ட திமுக அலுவலகமான திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் வார் ரூம் திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ம்எல்ஏ வக்கீல் எழிலரசன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வார் ரூமை திறந்து வைத்தார்.திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், வழக்கறிஞர் ஆர்த்தி அரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: