பாலக்காடு, மார்ச் 25: கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அடுத்த பெருங்கோட்டுக்கராவை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (30). மகளிர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு மறைமுகமாக போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் கொடுங்கல்லூர் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு ஹெராயின் போதைப்பொருட்கள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த இளம்பெண்ணை போலீசார் வழக்குப்பதிந்து ஸ்ரீலட்சுமியை கைது செய்தனர். அவர் நடத்தி வந்த அழகு நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
