ஊட்டி, மார்ச் 17: தாவரவியல் பூங்காவில் மலர்கள் பூக்காத நிலையில், கண்ணாடி மாளிகையில் உள்ள கள்ளிச்செடி அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஆண்டு தோறும் மே மாதம் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் ஊட்டியில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அப்போது பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்து வைக்கப்பட்டிருக்கும். பால்சம், பெக்கோனியோ, களஞ்சியா, பிரமிளா, சைக்ளோமன், கேக்டஸ், கள்ளிச் செடிகள் உட்பட பல வண்ண மலர் செடிகள் தொட்டிகளில் வைத்து, அவைகள் பல வடிவங்களில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும்.
