கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன

கூடலூர், மார்ச் 25: கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று கூடலூருக்கு கொண்டு வரப்பட்டன. நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் (தனி) 89 ஆயிரத்து 206 ஆண் வாக்காளர்களும், 94 ஆயிரத்து 675 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 7 பேர் என மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 888 வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி கூடலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 238 தொகுதிகளுக்காக 285 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

அந்த இயந்திரங்கள் நேற்று ஊட்டியில் இருந்து கூடலூருக்கு போலீசார் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ குணசேகரன் வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டார். பின்னர் செயின்ட் தாமஸ் தனியார் பள்ளியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

 

Related Stories: