கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் காரணைப்புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ₹6 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காரணைப்புதுச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அமைத்து தரும்படி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனிடம், பள்ளி நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில், செங்கல்பட்டு எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ₹6 லட்சத்தில், பள்ளி வளாகத்தில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.