ஈரோடு, பிப்.16: மொடக்குறிச்சி வாரச்சந்தையில் செயல்படும் மாட்டு இறைச்சி கூடத்தினை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஓலப்பாளையம் கருக்கன்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் கதிரவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மொடக்குறிச்சி வாரச்சந்தையில் வாரம் இரண்டு நாட்கள் மாட்டு இறைச்சி கூடம் செயல்படுகிறது. இதன் அருகே குடியிருப்பு, அரசு அலுவலக குடியிருப்பு, விளைநிலங்கள், அரசு நெல் கொள்முதல் நிலையம், ஒழுங்கு முறை விற்பனை கூடம் போன்றவை உள்ளன.