திருச்சியில் நேற்று நடந்த தேஜ கூட்டணி ெபாதுக்கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அற்புதமான கூட்டணி. எங்கள் கூட்டணியிலே பரஸ்பர உணர்வோடு நாங்கள் இணைந்திருக்கின்றோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய கூட்டணி கட்சித்தலைவர்கள் எறும்புகளை போல், தேனீக்களை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு மீண்டும் தமிழகத்திலே ஒரு அற்புதமான அதிமுக ஆட்சியை அமைப்போம். அதிமுக ஆட்சி அமைக்கும் பொழுது, `நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
