ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பிரதீப், ஹரிஹரன், விக்னேஷ், சிவா, முகிலன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். கொலை வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 14 பேருக்கு ஜாமின் வழங்கியது. 14 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அஞ்சலை, மலர்கொடியை தவிர்த்து மற்ற 12 பேரின் ஜாமினை ரத்துசெய்தது.

Related Stories: