நெல்லை: நெல்லையில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் ஓட்டுநர் சுமேசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். குற்றவாளி சுமேசுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபாரதம் அளித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
