கோபி,பிப்.14:கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சியில் வரியினங்களை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது: கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி,
குடிநீர் கட்டணம்,உரிமக்கட்டணத்தை நிலுவை இல்லாமல் உடனடியாக பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.வரியினங்களை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,பொதுமக்கள் உடனடியாக பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
