ஈரோடு, பிப். 10: சமூக நலத்துறையின் மூலம், ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலக கட்டுபாட்டின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர் பணியிடத்திற்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரி erode.nic.in யில் உரிய படிவம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். முதுகலையில் சமூகப்பணி, உளவியல் வளர்ச்சிப்பணிகள்,சமூகவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டதாரியாக இருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
