ஈரோடு, பிப். 14: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று 4வது நாளாக தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஈரோடு, கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாவித்ரி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள், ராஜூ, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை அண்டை மா நிலங்களான கேரளா, தெலங்கான மற்றும் பாண்டிச்சேரி, புதுடில்லியில் வழங்குவதை போல, உயர்த்தி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
