பெருந்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்

 

பெருந்துறை,பிப்.11: பெருந்துறை பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யபட்ட பொருட்கள் குறித்து அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.3.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வரலட்சுமியின் ஆலோசனையின்படி, பெருந்துறை நகராட்சி ஆணையாளர் புனிதன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், பெருந்துறை போலீஸ் எஸ்ஐ குழந்தைவேல் உள்ளிட்டோர் நேற்று பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: