நம்பியூர் திட்டமலை அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

கோபி, பிப். 13: கோபி அருகே உள்ள நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. நம்பியூர் திட்டமலையில் செயல்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நம்பியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நம்பியூர் பேரூர் செயலாளர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர் கீதா முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: