பவானியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

ஈரோடு, ஏப். 1: ஈரோடு மாவட்டம் பவானி சித்தாறு பெரியார் நகரை சேர்ந்த சூர்யா (21). இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார். சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த குழந்தைகள் நலக்குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சூர்யா மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: