சென்னை : ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா? என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வருமானத்தை மறைத்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை என்றும் தவறு செய்தவர்கள் அனைவரும் விஜய்யுடன் உள்ளார்கள்; இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும்? என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
