வில்லிவாக்கம் – தி.நகர் தொகுதிகளில் விஜய்யின் இன்றைய பிரசாரம் திடீர் ரத்து

 

சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர் தொகுதிகளில்
இன்று பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார். அந்தக் கட்சி மற்ற கட்சிகளின் இலவு காத்த கிளி போல் கூட்டணியை எதிர்பார்த்திருந்த நிலையில், எவரும் வராததால் தனித்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே சென்னையில் பெரம்பூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளிலும் திருச்சி கிழக்கிலும் பரப்புரை மேற்கொண்டார். அதேபோல், புதுச்சேரியிலும் பரப்புரை செய்தார்.
கடந்த வாரம் வில்லிவாக்கம் தொகுதில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தவெக தொண்டர்கள் கட்டுப்பாடுகளை மீறியதால் நெரிசல் ஏற்பட்டது.

ஆனால் தவெக தரப்பு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதில் குறைபாடு என்று காரணத்தை கூறி வில்லிவாக்கத்தில் நடைபெறவிருந்த பரப்புரையை ரத்து செய்தது. இந்நிலையில் வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதைப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் பரப்புரைக்கு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் இன்று வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்தும், தியாகராய நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்தை ஆதரித்தும் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் விஜய்யின் பிரச்சாரம் நேற்று இரவு ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

 

Related Stories: