பந்தலூர்,ஜன.28 : கூடலூர் அருகே எல்லமலை பகுதியில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு சுக பிரசவம் ஆனது. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி எல்லமலை நாயக்கன் காலணியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி மணி (28). இவரது மனைவி சுந்தரி (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவம் வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வழியில் பிரசவ வலி அதிகரிக்கவே, சுந்தரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் நசுருதீன் மற்றும் பைலட் பரமேஷ்வரன் ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.