டெல்லி: தமிழ்நாடு அரசு பணியில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
