கோவை, ஜன. 27: கோவை மாநகர் தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் 72-வது குடியரசு தின விழா கோவை ஆடீஸ் வீதி மூப்பனார் பவன் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். முன்னதாக, கோவை ஆத்துப்பாலம் பகுதியில், குறிச்சி பகுதி த.மா.கா. சார்பில் நடந்த குடியரசு தின விழாவிலும் பங்கேற்று, தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவில், மாவட்ட நிர்வாகிகள் அய்யாசாமி, ஜே.ஜே.ராஜன், கார்த்திக் கண்ணன், வளர்மதி கணேசன், குனிசை ரவிச்சந்திரன், ஹரிதாஸ், நாகராஜ், சதீஷ், சின்னத்தம்பி, ஆறுமுகம், பாலசுப்பிரமணியம், அன்வர்பாஷா, சிந்து, சின்னசாமி, முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.