உடுமலை, டிச.19: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. நேற்று நீர்வரத்து பாதுகாப்பான அளவில் இருந்ததாலும், மழைப்பொழிவு இல்லாததாலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனம் நடைபெறுகிறது.சபரிமலை சீசனையொட்டி, நேற்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து அமணலிங்கேஸ்வரரை தரிசித்து, அருவியில் குளித்து சென்றனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
