ஈரோடு, ஜன. 11: ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் மகாவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் அனுமன் ஜெயந்தி விழாவை எளிமையாக நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது. இது தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் கோயில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், விழா அன்று, அன்னதானம், திருவீதி உலா, தேர் இழுத்தல், வியாபார கடை அமைத்தல், பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.