பெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுத்திட வாட்ஸ்அப் குழு துவங்கப்பட்டுள்ளது. இதனை, ஐஜி நாகராஜ் துவக்கி வைத்தார் பெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் பெரும்புதூர் காவல் நிலையம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தற்போது போலீசார், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை தடுக்க கிராம குழு அமைத்து, அவர்களது எண்களை இணைத்து வாட்ஸப் குழு உருவாக்க முடிவெடுத்துள்ளனர்.இதன் துவக்கமாக பெரும்புதூர் காவல் நிலைய கட்டுபாட்டில் உள்ள கட்சிப்பட்டு கிராமத்தில் வாட்ஸ்அப் குழு துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.