காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் இரட்டை திருமாளிகை வழக்கு சம்பந்தமாக கடந்த 2 தினங்களாக சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் இரட்டை திருமாளிகையில் இருந்த கற்திருமேனிகள், கல்வெட்டுகள், கற்தூண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆதரவாக, உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.