ஈரோடு, டிச. 27: ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் சத்தி ரோடு மின்பாதையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய்கள் பதிக்கும் பணி நாளை (28ம் தேதி) நடக்க உள்ளது. இதனால், நேரு வீதி, சத்தி ரோடு, மஜித் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்கார சின்னையா வீதி, கிருஷ்ணன் வீதி, ஏ.பி.டி ரோடு, கே.ஏ.எஸ் நகர், மீராமொய்தீன் வீதி, மோசிக்கீரனார் வீதி, இந்திரா நகர், ரங்கநாதன் வீதி, வெங்கடபெருமாள் வீதி, மரப்பாலம் ரோடு, எஸ்.சி.எம். மில் ரோடு, செந்தில் கார்டன் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.