புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது தில்ஷாத். இவர் சவுதியில் கனரக மோட்டார் மெக்கானிக் மற்றும் பாதுகாப்பு காவலராக பணியாற்றிவந்தார். கடந்த 1999ம் ஆண்டு தன்னுடன் பணிபுரிந்த தனிநபர் ஒருவரை கொலை செய்துவிட்டு 26 ஆண்டு தலைமறைவாக இருந்த இவரை டெல்லி ஏர்போா்ட்டில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
