கோயம்பேட்டில் புதிதாக மகளிர் காவல் நிலையம்: இன்று திறக்கப்படுகிறது

அம்பத்தூர்: கோயம்பேடு, நெற்குன்றம், சின்மயா நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் வசித்துவரும் பெண்கள் குடும்ப பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் புகார் கொடுக்க மதுரவாயல் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் அலைச்சல் அதிகரித்ததுடன், பல மணி நேரம் காத்துகிடந்து புகார் கொடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. இதனால் சிரமமின்றி புகார் கொடுக்க கோயம்பேடு பகுதியில் அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், கோயம்பேடு காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையம் இன்று திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு துணை ஆணையர் குமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு, நெற்குன்றம், சின்மயா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள், மதுரவாயல் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்து வந்ததால் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோயம்பேடு காவல்நிலையத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையம் இன்று திறக்கப்பட உள்ளது. இனிமேல், கோயம்பேடு, நெற்குன்றம், சின்மயா நகர் பகுதி பெண்கள் இந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.’’ என்றார்.

The post கோயம்பேட்டில் புதிதாக மகளிர் காவல் நிலையம்: இன்று திறக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: