தெருமுனை கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பில், நாட்டின் பொது சொத்துக்களையும், மக்களின் பணத்தையும் கொள்ளையடித்த அதானியை கைது செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தி, ஒன்றிய அரசை கண்டித்து கண்டன தெருமுனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில அமைப்பாளர் டேவிட்செல்லப்பா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வசேகர், பழனி, சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வங்கிகள் எல்ஐசி தொழிலாளர்கள் வைப்பு நிதி ஆகியவற்றை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை கைவிட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை குறைத்து அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வழங்குகிற மக்கள் மீது சுமைகளை ஏற்றுகின்ற மோடி அரசின் பட்ஜெட் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

The post தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: