2 ரேஷன் கடைகளை அமைச்சர் திறந்து வைத்தார் கலெக்டர் பங்கேற்பு திருவலம் அருகே

திருவலம், ஜூலை 21: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த ஆரிமுத்துமோட்டூர்,கரிகிரி கிராமங்களில் ரேஷன் கடைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ரேஷன் கடைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தணிகாசலம், சரவணன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் அதிகாரியிடம், கட்டப்பட்ட ஆரிமுத்து மோட்டூர் ரேஷன் கடைக்கான கல்வெட்டு,அதன் மதிப்பீடு ஏன் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதில் திகைத்தவர்கள் திக்குமுக்காடி செய்வதறியாமல் திகைத்தனர். இதனையடுத்து கரிகிரிகாலனி பகுதியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

The post 2 ரேஷன் கடைகளை அமைச்சர் திறந்து வைத்தார் கலெக்டர் பங்கேற்பு திருவலம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: