கூலி தொழிலாளியை மிரட்டிய 3 பேர் கைது

ஸ்பிக்நகர், பிப். 25: முள்ளக்காடு ராஜிவ்நகர் வேலுச்சாமி மகன் வெற்றிவேல் முருகன் (35). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஏசுவடியான் மகன் ஆனந்தராஜ் (19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில வெற்றிவேல் முருகன், ராஜிவ்நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஆனந்தராஜ் மற்றும் இதே பகுதியை சேர்ந்த பூபதிமகன் சுரேஷ், பசுபதி மகன் ஜெபசிங் என்ற பீட்டர் ஆகியோர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

 சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரளவே, அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் எஸ்ஐ சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்தார். எஸ்ஐ சதீஷ் விசாரணை நடத்தி ஆனந்தராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தார்.

Related Stories: