அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கோடங்குடி கிராமத்தில் ராஜாங்கம், ஆறுமுகம், நடராஜன், ராணி, ஆனந்தன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடுகள் கன மழையால் மண் சுவர்கள் கரைந்து விழுந்தன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜெமின் பேரையூர் கிராமத்தை சேர்ந்த குழந்தை மனைவி அன்னபட்டு என்பவருடைய ஓட்டு வீடு ஒரு பக்க சுவரும். கீழ உசேன் நகரம் கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி மாலதியின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும், தெரணி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி தமிழ்மணியின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும், நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுப்பிரமணி கூரை வீடு ஒரு பக்க சுவரும், திம்மூரை சேர்ந்த மருதமுத்து மகன் சின்னகண்ணு கூரைவீடு ஒரு பக்க சுவர் இடிந்து சேதமடைந்தது.