வேலூர், அக்.10:வேலூரில் தேசிய தபால் வார விழாவையொட்டி மாணவர்கள் தபால் நிலைய பணிகளை நேற்று பார்வையிட்டனர்.நாடு முழுவதும் தேசிய தபால் வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வேலூர் கோட்ட தலைமை தபால் நிலையத்தில் தேசிய தபால் வார விழா நேற்று தொடங்கி வரும் 15ம் தேதி வரையில் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படுகிறது. தபால் வார விழாவிற்கு வேலூர் தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் கோமல்குமார் தலைமை தாங்கினார்.