வேலூர்: ஓடும் பஸ்சில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கண்டக்டரை பயணிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் பயணிகளுடன் புறப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த கண்டக்டர் சதாசிவம் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பாகாயம் அடுத்த அ.கட்டுபுடி சாலை சந்திப்பு அருகே சென்றபோது சதாசிவம் திடீரென்று நிலைதடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.