சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதலில் இருவர் காயம்: தந்தை, மகன் கைது

சாத்தான்குளம், ஜூலை 24:  சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த கோயில்ராஜ் மகன் தினகரன் (45). விவசாயியான இவருக்கும், உறவினரான  யோசேப் (55) என்பவருக்கும் வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக விரோதம் இருந்துவந்தது. கடந்த 21ம் தேதி மீண்டும் ஏற்பட்ட தகராறில் யோசேப், அவரது மகன் பொன்ராஜ் (19) ஆகிய இருவரும் சேர்ந்து தினகரனை தாக்கினர். இதில் அவர்  காயம் அடைந்தார். இதுபோல் யோசேப் மனைவி சந்தனமாியாளை (37) தினகரனும்,   அவரது உறவினர் தங்கசுந்தரமும்  தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தனமரியாள், சாத்தான்குளம் அரசு மருத்துவ மனையில்  சேர்க்கப்பட்டார். கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த 4பேர் மீது சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் வழக்கு  பதிந்தார். இதையடுத்து யோசேப்யையும், அவரது மகன் பொன்ராஜையும் கைது செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.

Related Stories: