கல்லூரி மாணவி மாயம்

தூத்துக்குடி, பிப். 14: தூத்துக்குடியில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் மகள் கார்த்திகா (21). இவர், தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி வழக்கம்போல், கார்த்திகா கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories: