வீட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்கு

உடன்குடி, பிப். 14: மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் தனது மாமா கணேசன் என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்கு வீட்டை கிரயப்பத்திரம் எழுதி கொடுத்துளளார். பணத்தை நீண்ட நாட்களாக திருப்பி தராததால் வீட்டை காலி செய்யுமாறு கணேசன் கூறியுள்ளார். அவர் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புதிதாக வீடு கட்ட வேண்டுமென கூறி கணேசன், காளிமுத்துவிடம் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேசன், அவரது மகன்கள் கதவை உடைத்து சென்று பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். காளிமுத்து அளித்த புகாரின் பேரில் கணேசன், அவரது மகன்கள் துரை, காளிராஜ், மருமகன் விக்னேஷ் ஆகியோர் மீது மெஞ்ஞானபுரம் எஸ்ஐஅமலோற்பவம் விசாரித்து வருகிறார்.

Related Stories: