தூத்துக்குடியில் கால்பந்து சிறப்பு பயிற்சி முகாம்

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடி, புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்தாட்ட சிறப்பு பயிற்சி முகாமினை டவுண் டிஎஸ்பி பிரகாஷ் துவக்கி வைத்தார்.சீமேன்ஸ் கமோசா நிறுவனம் இந்தியா முழுவதும் கால்பந்தாட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி, புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்தாட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் லாசல் மேல்நிலைப்பள்ளி சார்பில் 60 வீரர்களும், திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி சார்பில் 15 வீராங்கனைகளும் பங்கு பெறுகிறார்கள். மேலும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாழ்வியல் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. இப்பயிற்சியை டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கி வைத்து வீரர்களுக்கு சீருடைகளை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை புனித லசால் பள்ளி தாளாளர் கென்னடி, தலைமையாசிரியர் ஹெல்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், தர்மர் மற்றும் சீமேன்ஸ் கமோசா நிறுவன ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: