உத்திரமேரூர், பிப்.13: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டுதலுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை வகித்து பேசியதாவது. தற்போது உள்ள கிராமபுற சூழ்நிலைகளில் கல்வி மற்றும் திறன் பயிற்சி வேலைவாய்ப்பு பெறுவதில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்த கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ளன. இணையதள சேவைப் பயன்பாடு எல்லோரும் பெற வாய்ப்பு உள்ளது. அதனைப் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை வளப்படுத்தி கொள்ளலாம்.