மாநில பளுதூக்கும் போட்டி தூத்துக்குடி பள்ளி மாணவர் முதலிடம்

தூத்துக்குடி, ஜன. 23:தூத்துக்குடி மாணவர் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்றார்.மாநில அளவிலான 13வது பளுதூக்கும் போட்டிகள் கோயம்புத்தூர் நேரு கல்லூரியில் நடந்தது. இதில் மிக இளையோர் பிரிவில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர் பாலவெங்கடேஷ் மாநிலத்தில் முதலிடம் பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் பள்ளி செயலாளர் செல்வராஜ், தலைமையாசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Related Stories: