கோவை,டிச.7: மருத்துவ துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு பதிவை சரிபார்த்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவபணியாளர் தேர்வு வாரியத்தால் 43 கண்சிகிச்சை உதவியாளருக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அளவில் பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சியுடம் மாநில மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்பட்ட கண்சிகிச்சை உதவியாளர் பட்டய சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். ஒசி பிரிவினருக்கு மட்டும் அதிகபட்ச வயது 30 ஆகும், இதர பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. மேற்கண்ட வயது வரம்பு, கல்விதகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள், ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், பணீயில் இருக்கும் ராணுவத்தை சேர்ந்தோருக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.