மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு

திருச்செந்தூர், நவ. 2:  குரும்பூர் அடுத்த கானம் கஸ்பா சந்தி தெருவைச் சேர்ந்தவர் பால்சாமி (65). இவரது மனைவி ராணி அம்மாள் (60). தம்பதிக்கு ஒரு மகள், 4 மகன்கள்.  இளையமகன் அருணை தவிர அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் முருகானந்தம் சென்னையில் செங்குன்றம் அடுத்த பஞ்சட்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் பால்சாமி, ராணி அம்மாள் மற்றும் திருமணமாகாத மகனான அருள் உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இதனிடையே உடல்நலக்குறைவால் ராணி அம்மாள் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து கானத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மனைவி இறந்த துயரத்தில் இருந்துவந்த பால்சாமியும் நேற்று மாலை 6 மணி அளவில் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் மனைவி அடக்கம் செய்த இடம் அருகிலேயே இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

Related Stories: