செந்துறை வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

செந்துறை, அக். 10: செந்துறை பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செந்துறை வட்டாரத்தில் உள்ள அசாவீரன்குடிக்காடு, மணபத்தூர், குழுமுர், வஞ்சினபுரம், செந்துறை, சன்னாசிநல்லூர், தளவாய், அயன்தத்தனுனர், நமங்குனம், நக்கம்பாடி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையலாம். மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு மற்றும் விதைக்க இயலாமை மற்றும் பூச்சிநோய் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். எனவே நெல் பயிரிடும் விவசாயிகள், ரபீ பருவத்துக்கு வரும்  நவம்பர் 30ம் தேதிக்குள் அருகில் உள்ள தேசிய வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கம் அல்லது மத்திய அரசின் அனுமதி பெற்ற பொது சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.ஒரு ஏக்கருக்கு ரூ.443 பிரீமியத்தொகையாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்களுடன் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, சிட்டா, விதைப்பு சான்று  கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு எடுத்து காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு உதவி வேளாண் அலவலர்கள் பாரி 9047874495, ஆனந்தி 9047792391, மலர்கொடி 9787483625, ஒளிச்செல்வி 6379419263, ராஜா 9943519833 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: