ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூடல்… வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி ரத்து ? : இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது!!

சென்னை : தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. தமிழகத்தில்.கொரோனாவை கட்டுப்படுத்த ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூட வாய்ப்பு என்றும் மக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகளையும் உத்தரவிடப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கொரோனா கட்டுப்படுத்த வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படக்கூடும். அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு நேரத்தை மாற்றவும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது மேலும் சில நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பும் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க கூட்டம் அதிகமாக உள்ள வார சந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படக்கூடும் என்றும் முழு ஊரடங்காக அல்லாமல் பணி நேரம் குறைப்பு , பணியாட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அத்துடன் வீட்டிலிருந்தே பணியாற்றுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது….

The post ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூடல்… வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி ரத்து ? : இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது!! appeared first on Dinakaran.

Related Stories: