வல்லூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு நீக்கப்பட்டு, மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. திருவள்ளூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள, மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.  …

The post வல்லூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: